கவுன்சிலர்களே மேயரைத் தேர்ந்தெடுக்கலாம்! அமைச்சரவையில் ஆலோசனை!
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மேயர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அவரச சட்டத்தை கொண்டு வருவதற்கு தமிழக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கு மறைமுக தேர்தலைக் கொண்டு வந்தால், தமிழகத்தில் சென்னை உட்பட 15 மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.