தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றவர் பலி!

தமிழகத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு
 

மிழகத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

A1TamilNews.com