சென்னையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று!

சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,235 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 117 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,556 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 
சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.
 
இன்று சென்னையில் மட்டும் 1,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,235 ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் இன்று 117 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று 5,556 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,67,015 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 53,716 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,703 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழகம் முழுவதும் 70,153  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.