தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 14 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா..!

 

இன்று ஒரே நாளில் 14,842 பேருக்கு கொரோனா பாதிப்பு என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 10,66,329 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 4,086 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 10,756 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 3,06,013 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து 9,142 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 9,52,186 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,00,668 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 1,22,671 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 2,15,25,113 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13,475 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.