தமிழத்தில் 82 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை! அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!!
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவை தமிழக அரசு நியமித்து ஆலோசனைகள் பெற்று வருகிறது.
ஆய்வுகளின் அடிப்படையிலான முடிவுகளை, முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையை அளித்து வருகிறது இந்த நிபுணர் குழு. ஆய்வறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு வருகிறார்.
தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் முழு ஊரடங்கும் மற்றம் மாவட்டங்களில் தளர்வுகளுடனும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதி இந்த ஊரடங்கு நிறைவடைவதையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இன்று காலை 10 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலைக்குள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த முதலமைச்சரின் அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.