10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட்10ல் வெளியிடப்படும்!அரசுத் தேர்வுகள் இயக்ககம்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி மதிப்பெண்கள் கணக்கிடும் பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் புதிய முறைப்படி ஆகஸ்ட் 10 ம் தேதி தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 10 திங்கள்கிழமை காலை 9.30
 

மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன.

ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி மதிப்பெண்கள் கணக்கிடும் பணி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் புதிய முறைப்படி ஆகஸ்ட் 10 ம் தேதி தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 10 திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் https://tnresults.nic.in/, https://dge1.tn.nic.in, https://dge2.tn.nic.in வெளியிடப்பட இருக்கிறது. தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com