மதுரையில் கொரோனா வைரஸ்-பீதியில் பொதுமக்கள்!
திங்கட் கிழமை முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையான மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இருவருக்கும் கொரானோ வைரஸ் தொற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிறப்பு சிகிச்சைப் பிரிவில் தகுந்த தடுப்பு ஏற்பாடுகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முழுமையான நோய் தடுப்பு முறைகள் பின்பற்றப்பட்ட போதிலும்,சிறப்பு சிகிச்சைப் பிரிவில் தகுந்த முறையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் கொரானோ வைரஸ் பற்றி மிகுந்த பீதியுடன் காணப்படுகிறார்கள்.