இன்னுமொரு கீழடி? தூத்துக்குடி அருகே சிவகளையில் அகழ்வாராய்ச்சி!!
இந்த இலக்கியங்களில் கூறப்பட்டவைகளுக்கு வரலாற்று ஆவணங்களாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் எண்ணற்றப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப் பட்டுள்ளது.
கீழடிக்கும் முன்னதாகவே தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்திற்கு தெற்கே தாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஆதிச்சநல்லூர் அகழ்வாரய்ச்சி நடத்தப்பட்டு ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலே உள்ளது.
பல்வேறு கோரிக்கைகள், நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொடரப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலின் போது ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை தொடரச்செய்வேன் என்று கனிமொழி வாக்குறுதி அளித்து இருந்தார். இந்நிலையில் ஏரல் அருகே சிவகளையிலும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கியுள்ளன. சிவகளையில் கீழடிக்கு நிகரான நாகரீக அடையாளங்கள் கிடைக்கப் பெறும் என்று நம்பப்படுகிறது.
சிவகளை பரும்பு பகுதியின் தென்புறத்தில் உள்ள வலப்பான்பிள்ளை திரட்டில் அகழாய்வு தொடங்கியுள்ளது.. 4 இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப் படுவதாக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தன் தெரிவித்துள்ளார். அவர் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
ஆதிச்சநல்லூர், சிவகளையைத் தொடர்ந்து கொற்கையிலும் மீண்டும் தொல்லியல் துறை ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.