5 பைசா நாணயத்திற்கு பிரியாணி! அலைமோதும் கூட்டம்..
5 பைசா நாணயம் கொண்டுவருவோருக்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்படும் என முஜிப் பிரியாணி உணவகம் விளம்பரம் செய்திருந்தது. இதனையடுத்து, பிரியாணியை வாங்குவதற்கு 500 க்கும் மேற்பட்டோர் கடை திறப்பதற்கு முன்பாகவே திரண்டனர்.
எல்லோரும் வீட்டிலிருந்த பழைய 5 பைசா நாணயத்தை தேடிப்பிடித்து எடுத்துவந்து உணவகத்தில் கொடுத்து பிரியாணியை வாங்கிச் சென்றனர். பழைய நாணயங்களின் பெருமையை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவும், பழைய நாணயங்களை சேகரிப்பதற்காகவும் இந்த அறிவிப்பை விடுத்ததாக, பிரியாணி கடை உரிமையாளர் ஷேக் முஜிபுர் தெரிவித்தார்.
இதேபோல் சென்னையிலுள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடையிலும் 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்பட்டுவருகிறது.