தலைமைச் செயலகம், எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! காவல் துறை தீவிர விசாரணை!

தமிழகத்தைக் கொரோனா பிடியிலிருந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. சென்னையில் தலைமைச் செயலகம், முதல்வர் எடப்பாடி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் எச்சரிக்கை விடுத்தார். உடனே போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல்வர் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த மர்ம மிரட்டல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உடனடியாக தீவிர விசாரணை நடத்திய சைபர்
 

மிழகத்தைக் கொரோனா பிடியிலிருந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

சென்னையில் தலைமைச் செயலகம், முதல்வர் எடப்பாடி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் எச்சரிக்கை விடுத்தார்.

உடனே போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல்வர் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த மர்ம மிரட்டல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உடனடியாக தீவிர விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீஸ் ஏற்கனவே இதே போல் மிரட்டல் விடுத்த சென்னை மடிப்பாக்கம் சிக்கந்தர் பாஷா என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வீண் வதந்திகள், மிரட்டல்கள் விடுப்போர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

A1TamilNews.com