சூப்பர் ஸ்டார் வாக்கு பொய்க்குமா? கலாய்த்த கம்யூனிஸ்ட் தலைவருக்கு ஆணித்தரமாக பதிலளித்த நடிகர் ஜீவா !!
“இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்,” என்று ட்விட்டர் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி கோரிக்கை விடுத்து இருந்தார் ரஜினிகாந்த்.
தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு வந்து டோக்கன் சிஸ்டத்தில் மது விற்பனையை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் சொன்னதை எடப்பாடி கேட்கல்லியே என்று சமூகத் தளங்களில் ட்ரோல் செய்தனர். அதற்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி தந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அருணனும் ரஜினியின் டாஸ்மாக் ட்வீட் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.
“மீண்டும் டாஸ்மாக் கடையை அரசு திறந்தா மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது”: ரஜினி. இந்தா திறந்துட்டாங்க. அப்ப அதிமுக, பாஜக ஆட்சிக்கு வராது, எதிர்கட்சிகள்தானே வரும். சூப்பர்ஸ்டார் வாக்கு பொய்க்குமா என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தார் அருணன்.
இதற்கு பதிலளித்துள்ள ரஜினி ரசிகரும் நடிகருமான ஜீவா, “மதுக்கடை நடத்துபவர்கள் ஆட்சிக் கனவை மறந்துவிட வேண்டும்; மதுஆலைகள் நடத்துபவர்கள் கனவு காண்பதையே மறந்துவிட வேண்டும்! நல்லோர் வாக்கு பொய்க்காது, வாய்மையே வெல்லும்,” என்று கூறியுள்ளார்.
ரஜினியை கலாய்த்து ட்வீட் செய்த மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருக்கு, நாசுக்காகவும் ஆணித்தரமாகவும் பதிலளித்துள்ள நடிகர் ஜீவாவின் ட்வீட்டை ரஜினி ரசிகர்கள் ட்விட்டர், வாட்ஸ் அப், ஃபேஸ்புக்குகளில் பரப்பி வருகிறார்கள்.