சரவணா ஸ்டோர் ஓனரை மிரட்டிய மர்ம கும்பல்!

சென்னையில் பிரபல நகைக்கடையான சரவண ஸ்டோர் உரிமையாளரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவேற்காடு சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகரைச் சேர்ந்த தனசேகரன் என்பவர், சென்னை தியாகராயநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக் கடையில் கடந்த 3 ஆம் தேதி நகை வாங்கியுள்ளார். நகையை வாங்கியபின் கழிவறைக்கு சென்ற அவர், அங்கு முலாம் பூசியிருந்த நகையை மாற்றிக்கொண்டுவந்து போலி நகைகளை விற்பனை செய்வதாக ஊழியர்களிடம் சண்டையிட்டுள்ளார்.
 

சென்னையில் பிரபல நகைக்கடையான சரவண ஸ்டோர் உரிமையாளரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவேற்காடு சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகரைச் சேர்ந்த தனசேகரன் என்பவர், சென்னை தியாகராயநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக் கடையில் கடந்த 3 ஆம் தேதி நகை வாங்கியுள்ளார். நகையை வாங்கியபின் கழிவறைக்கு சென்ற அவர், அங்கு முலாம் பூசியிருந்த நகையை மாற்றிக்கொண்டுவந்து போலி நகைகளை விற்பனை செய்வதாக ஊழியர்களிடம் சண்டையிட்டுள்ளார்.

மேலும் தான் ஒரு பத்திரிக்கையாளர் என்றும், போலி நகைகளை விற்பனை செய்ததை ஊடகங்களில் அம்பலப்படுத்துவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனை வெளியில் சொல்லாமலிருக்க வேண்டுமென்றால் 15 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். அவரின் மிரட்டலுக்கு பயந்து சரவணா ஸ்டோர் உரிமையாளரும் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். அதன் பிறகு தனது நண்பர்களுடன் இணைந்து வந்து ஒரு கோடி கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் கடை நிர்வாகிகள், மாம்பலம் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட தனசேகர் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

https://www.A1TamilNews.com