முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ100 அபராதம்!மாநகராட்சி ஆணையர் திடீர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் தற்போதைய சூழ்நிலையில் பொது வெளியில் நடமாடுபவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அனைத்து நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் வரும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதத் தொகையாக ரூ 100 வசூலிக்கப்படும் எனவும், இலவசமாக அவர்களுக்கு ஒரு முக கவசம் வழங்கப்பட்டு தொடர்ந்து அணிய
 

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் தற்போதைய சூழ்நிலையில் பொது வெளியில் நடமாடுபவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அனைத்து நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் வரும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதத் தொகையாக ரூ 100 வசூலிக்கப்படும் எனவும், இலவசமாக அவர்களுக்கு ஒரு முக கவசம் வழங்கப்பட்டு தொடர்ந்து அணிய அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கொரோனா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூக நலனுக்காகவும் இந்த அதிரடி அறிவிப்பை உடனடியாக செயல்படுத்தியிருப்பதாக மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com