தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை – உச்சநீதிமன்றம்

டெல்லி : கள்ளக் காதலில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகிறது ஆனால் பெண்ணுக்கு எந்த தண்டனையும் இல்லை. எனவே, இந்திய தண்டனைச் சட்டம் 497வது பிரிவை மாற்ற வேண்டும் என்று ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் மனுவில், “கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவிக்கு எதிராக கணவர் புகார் கொடுத்தால்
 


டெல்லி : கள்ளக் காதலில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகிறது ஆனால் பெண்ணுக்கு எந்த தண்டனையும் இல்லை. எனவே, இந்திய தண்டனைச் சட்டம் 497வது பிரிவை மாற்ற வேண்டும் என்று ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் மனுவில், “கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவிக்கு எதிராக கணவர் புகார் கொடுத்தால் அவனது மனைவியுடன் பழகிய ஆணுக்கு மட்டுமே தண்டனை கொடுக்க முடியும். கணவன் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மனைவியால் புகார் கொடுக்க முடியாதநிலை உள்ளது. ஆண்- பெண் சமத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் ஐபிசி 497 ஆவது பிரிவை நீக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில், “திருமணமான பெண்ணுடன் வேறு ஒரு ஆண் பழகுவது உறுதி செய்யப்பட்டால் அந்த ஆணுக்கு மட்டும் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும். ஆனால் இதே குற்றத்தை செய்த பெண்ணுக்கு அந்த 5 ஆண்டுகள் தண்டனையை வழங்க முடியாது என சட்டத்தில் உள்ளது,” என்றார்.

மேலும், “கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்கள் குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்படப்படவில்லை. எனவே கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு தண்டனை சட்டம் இல்லை.” என்றும் கூறினார்.

இந்த வழக்கு விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது

அதன்படி இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில், “பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல. ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும். பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும்.தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை. 497-ஆவது பிரிவு சட்டவிரோதமானது,” என தீர்ப்பளிக்கப்பட்டது.

– வணக்கம் இந்தியா