தனித்துவமான காதல் கதை.! கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு சிலை... நாள்தோறும் வழிபட்டு வரும் காதல் கணவர்

 

மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த தன் மனைவியின் நினைவாக நினைவுச் சின்னம் அமைத்து ஒருவர் வழிபட்டு வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபுர் மாவட்டத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோரின் காதல் மனைவி கீதா கொரோனா பரவலின் 2-வது அலையில் நோய்வாய்பட்டு உயிரிழந்தார்.

மனைவியின் பிரிவை ஏற்க முடியாத நாராயண் சிங், தனது மகன்களுடன் சேர்ந்து தனது மனைவியின் நினைவாக வீட்டிற்கு வெளியே ஒரு கோவிலைக் கட்ட நினைத்தார். அவரது மனைவி இறந்த 3வது நாளில், அவரது மகன்கள் கீதா பாயின் சிலையை உருவாக்க உத்தரவிட்டனர், ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மூன்று அடி பெரிய இந்த அழகான சிலை வடிவில் வந்தது.

இப்போது காலையிலும் மாலையில், நாராயண் சிங்கும் அவரது மகன்களும் வழக்கமான வழிபாடு செய்கிறார்கள்.