தப்பா ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ்! பெங்களூரில் திரண்ட ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளார்கள்!
பெங்களூரிலிருந்து ஒடிசா திரும்பிச் செல்ல விண்ணப்பித்து இருந்த தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை ஒடிசா மாநில பூரி நகருக்கு ரயில் புறப்படும் என்று மொபைல் போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதை நம்பிய தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் மேலும் பலருக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளனர்.
தங்கள் தங்கியிருந்த இருப்பிடத்தை காலி செய்து விட்டு பெங்களூரின் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்துள்ள தொழிலாளர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது.
முதன் முதலில் டெல்லியில் இப்படி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டார்கள், பின்னர் சூரத், மும்பையில் இப்படி நடந்தது. தற்போது பெங்களூரிலும் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் திரண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் மெசேஜ்-க்கு எவ்வளவு சக்தி என்பதையும் காட்டி விட்டது இந்த சம்பவம்!
நன்றி: தி நியூஸ் மினிட்