கொரோனாவிற்கான தடுப்பூசி 2021க்கு முன் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு கிடையாது! மத்திய அரசு திட்டவட்டம்!
ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்தியாவில் தடுப்பு மருந்து நடைமுறைக்கு வந்துவிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள covaxin TM மருந்தை மனிதர்கள் மீது சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘கோவேக்சின், இசட்ஒய்கோவ்-டி போன்ற 11 தடுப்பு மருந்துகள் மனித சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆனால் இந்த மருந்துகளில் எதுவும் 2021 ஆம் ஆண்டுக்கு முன் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.