அதிர்ச்சி! இந்தியாவில் கொரோனாவால் அதிகம் உயிரிழந்தவர்கள் வயது 30-60க்குள்! மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!
அதன் படி இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களான 43 சதவீதம் பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் இந்திய மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் இறப்பு விகிதம் 85 சதவீதமாக உள்ளது. குறிப்பாக 30 முதல் 44 வயது மற்றும் 45 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களில் 43 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் ஜூலை 9ம் தேதி வரை உள்ள கொரோனா பாதிப்படைந்தவர்களின் வயது பட்டியல்
14 வயதுக்குட்பட்டவர்கள் 35%
15 முதல் 28- 18%
30 முதல் 44- 22%
45 முதல் 59- 15%
60 முதல் 74 – 8%
75 வயதுக்கு மேற்பட்டவர்கள் – 2% என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.