நிபந்தனைகளை மீறிய ப.சிதம்பரம்! பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு…!
இந்நிலையில் அமைச்சராக இருந்த காலத்தில் எந்தவொரு தவறும் நடைபெறவில்லை என்று சிதம்பரம் பேசியிருப்பதாகவும், ஆனால் ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் சிதம்பரத்திற்கு தொடர்புள்ளது என்ற அடிப்படையில்தான் வழக்கே உள்ளது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இதன் மூலம் ஜாமீன் நிபந்தனைகளை சிதம்பரம் மீறியிருப்பதாக ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.. ந உச்ச நீதிமன்றம், வழக்கு குறித்து கருத்து எதுவும் கூறக் கூடாது என நிபந்தனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்தார்.அப்போது அவர், “ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலையாகி வந்துள்ள முதல் நாளிலேயே நிபந்தனையை மீறி இருக்கிறார். தனக்கு தானே நன்னடத்தை சான்று அளித்துக்கொண்டிருப்பது நிபந்தனையை மீறிய செயலாகும்” என்று வன்மையாக கண்டித்துள்ளார்.