வாயில் ஒரு கிலோ தங்கம்: உஸ்பெஸ்கிஸ்தான் பயணிகள் இருவர் கைது

 

வாயின் உட்பகுதியில் மறைத்து சுமார் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த இருவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அந்த சோதனையில், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இருவர் தங்கம் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.


அதில் வாயினுள் பற்களை போன்று தங்கம் மற்றும் உலோக செயினை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.