குருத்வாராவை பைனாகுலர் வழியாக தரிசனம் செய்ய ஆர்வம் காட்டும் சீக்கியர்!
அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இந்த வழித்தடம் வழியாகச் செல்ல ஐந்தாயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 250 பேர் மட்டுமே குருத்வாராவை தரிசனம் செய்வதாக தெரியவந்துள்ளது. நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குருத்வாராவை காண ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கத் தெரியாத பலர், பஞ்சாப் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பைனாகுலர் மாடத்தின் வழியாக தரிசனம் செய்து வருகின்றனர்.
நேரில் சென்று வழிபடுவோரின் எண்ணிக்கையைவிட பைனாகுலரில் காண்போரின் எண்ணிக்கை அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.