விண்ணில் பாய்வதற்கு சந்திராயன்2 தயார் .. நிலவைத் தொடுவது எப்போது?
ஜூலை 15ம் தேதி விண்ணில் செலுத்தப்பட தயாராக இருந்த வேளையில், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக நிறுத்தப்பட்டது. முழுக்கவும் இந்தியாவில் தயாரான தொழில் நுட்பத்தில் உருவான சந்திராயன்2, நிலவின் தெற்குப் பகுதியில் செப்டம்பர் 6 அல்லது 7ம் தேதி இறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மெதுவாக தரையிறங்கும் தொழில் நுட்பத்தில் இந்தியாவின் முதல் முயற்சியாக இது அமைகிறது. நிலவில் தரையிறங்கும் இத்தகைய முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து நான்காவது நாடு இந்தியா ஆகும்.