Facebook, Insta ஆப்களை நீக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!
மே முதல் வாரத்தில் துவங்கிய இந்திய சீனா எல்லைப் பகுதி பதற்றம் ஜூன் மாதத்தில் மோதலாக உருவெடுத்து இருநாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தது இந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. இதன் காரணமாக சீனா தயாரிப்பு பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோஷங்கள் நாடு முழுவதும் உருவானது. இதனையடுத்து மத்திய அரசு சீன ஆப்களான டிக் டாக், ஷேர், ஹலோ உள்பட 50க்கும்
Jul 9, 2020, 18:00 IST
இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தது இந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.
இதன் காரணமாக சீனா தயாரிப்பு பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோஷங்கள் நாடு முழுவதும் உருவானது. இதனையடுத்து மத்திய அரசு சீன ஆப்களான டிக் டாக், ஷேர், ஹலோ உள்பட 50க்கும் மேற்பட்ட ஆப்களுக்கு தடை விதித்தது.
இதன் தொடர்ச்சியாக நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தற்போது Face Book, Tik Tok, Ture Caller, Instagram உள்பட 89 செயலிகளை இராணுவ வீரர்கள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.