காங்கிரஸ் மீதான ரூ 5000 கோடி அவதூறு வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு!

ஆமதாபாத்: ரஃபேல் ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் அனில் அம்பானி ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார் என காங்கிரஸ் சார்பு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அனில் அம்பானி, காங்கிரஸ் மீதும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீதும் ரூ.5 ஆயிரம் கோடி கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அந்த வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி
 

 

ஆமதாபாத்: ரஃபேல் ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் அனில் அம்பானி ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார் என காங்கிரஸ் சார்பு நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அனில் அம்பானி, காங்கிரஸ் மீதும், நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகை மீதும் ரூ.5 ஆயிரம் கோடி கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் அந்த வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலையொட்டி அரசியல் காரணங்களுக்காகத்தான் இது போன்ற செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது தேர்தல் முடிவடைந்து விட்டது. எனவே எங்கள் தரப்பில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருக்கிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த அறிக்கை யார் பெயரில் வெளியானது என்ற குறிப்பு ஏதுமில்லை.

அதே நேரம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன வழக்கறிஞர் ரசேஷ் பாரிக், வழக்கு வாபஸ் பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

– வணக்கம் இந்தியா