ஐந்தாவது கட்ட ஊரடங்கு குறித்து பிரதமருடன் அமித்ஷா ஆலோசனை!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மே 31 ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது. ஐந்தாவது கட்ட ஊரடங்கில் அளிக்கப்பட உள்ள தளர்வுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட
 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மே 31 ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது. ஐந்தாவது கட்ட ஊரடங்கில் அளிக்கப்பட உள்ள தளர்வுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

இந்த ஆலோசனைக்கு முன்பே உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் மன்கிபாத் நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

A1TamilNews.com