புலமைப் பித்தனுக்கு வாக்குரிமை... இது தாண்டா எஸ்.ஐ.ஆர்?
இறந்து 4 ஆண்டுகள் ஆன பிரபல பாடலாசிரியரும் அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவருமான புலமைப் பித்தனுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதாக எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப் பித்தன் நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பில்லாத நிலையில், இந்த தவறு குறித்து அரசியல் கட்சிகள் கடும் ஆட்சேபத்தை தெரிவித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வசித்து வந்த புலமைப்பித்தன், இலக்கியமும் அரசியலும் இணைந்த ஒரு முக்கிய ஆளுமையாக அறியப்பட்டவர். இப்படி ஒரு பிரபலத்தின் பெயரே நீக்கப்படாமல் தொடர்வது, சாதாரண மக்களின் பெயர்கள் எத்தனை தவறாக நீக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை பலப்படுத்துகிறது. இதனால் எஸ்ஐஆர் நடவடிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உயிருடன் இருக்கும் வாக்காளர்கள் நீக்கப்படுவதும், இறந்தவர்கள் பெயர் தொடர்வதும் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.