அடிக்கப் போகுது ‘மோக்கா’ புயல்.. எதுக்கும் 9ம் தேதி தயாரா இருங்க.. வானிலை மையம் அலர்ட்!!

 

வங்கக்கடலில் வரும் 9-ம் தேதிக்குள் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ‘மொக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது, மறுநாள் தென் கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து, வரும் 9ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்தில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் புயலுக்கு ‘மொக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.