வீட்டில் பதுங்கி இருந்த ராட்சத முதலை.. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

 

சிதம்பரம் அருகே வீட்டில் பதுங்கி இருந்த 8 அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரஷீத். இவர், இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பகுதியில் சுமார் 8 அடி நீளமும் 110 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று இருந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

<a href=https://youtube.com/embed/BcoVarqS83k?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/BcoVarqS83k/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

பின்னர் வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் முதலையை பத்திரமாக அங்கிருந்து மீட்டு, வக்காரமரி ஏரியில் முதலையை பாதுகாப்பாக விட்டனர், வீட்டிற்குள் அதிகாலையில் முதலை இருந்த சம்பவம் நாஞ்சலூர் கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.