சுத்த சைவ ஆதீனங்கள் 18ல்
குன்றக்குடி ஆதீனமும், பேரூர் ஆதீனமும் வீரசைவ ஆதீனங்கள், பல்லக்கு ஏறுவதில்லை.
மதுரை ஆதீனமாக விளங்கிய அருணகிரிநாத சுவாமி 40 ஆண்டுகளாக பல்லக்கே ஏறவில்லை!
காஞ்சி தொண்டைமண்டல ஆதீனம் பட்டமேற்றபோது கூட பல்லக்கு ஏறவில்லை!
சூரியனார் கோயில் ஆதீனம் பட்டமேற்றபோது மட்டும் பல்லக்கு ஏறியிருக்கிறார்!
திருவாவடுதுறை ஆதீனத்தின் 23 வது குருமகாசந்நிதானமாக விளங்கியவர் ஓர் சமூக சீர்திருத்தவாதி. மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கு ஏறமாட்டேன் என்றும் பொன் ஆபரணங்களை அணிவதை தவிர்த்தும், பண்டிதர் மட்டுமே பயின்ற திருமுறை சைவ சாத்திரங்களை அனைத்து சமுதாய மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர். ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாகவே சென்று எளிய முறையில் அவர்களுக்கு ஆசி நல்கி வந்தவர்.
பின்னாளில் ஆதீன பிரமுகர்களின் கடும் கட்டாயத்தின் பேரில் சம்பிரதாயபடி அன்று மட்டும் பல்லக்கு ஏறியும் பொன்னாபரணம் அணிந்து வலம்வந்தார். அவர் மறைவிற்கு பின் தற்போது உள்ளவர் ஆண்டுதோறும் பட்டினப்பிரவேச பல்லக்கில் வலம் வருகிறார்.
இன்றைக்கு தன் உயிருக்கு ஆபத்து என்று அளப்பரை விடும் மதுரை ஆதீனமே ஆண்டு தோறும் ஆதீன குருமுதல்வர் குருபூசையன்று ஏறவேண்டிய பல்லக்கை இவ்வாண்டு ஏறாது தவிர்த்துள்ளார்
பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை ஆதின குரு முதல்வர் குருபூசையன்றே நடத்துவர். மதுரை ஆதினத்தில் ஞானசம்மந்தருக்கு வெள்ளிக்கோரத புறப்பாடு மட்டுமே
இன்று (5.5.2022) நடைபெற்ற வேளாக்குறிச்சி ஆதின குரு முதல்வர் குருபூசையில் பட்டினப்பிரவேசமோ, பல்லக்கோ இல்லை
செங்கோல் ஆதினத்திலும் இன்று தான் குரு முதல்வர் குருபூசை. இதில் ஆதின குருமுதல்வர் சிலைக்கு தான் பட்டினப்பிரவேசமே தவிர இப்போதிருக்கும் ஆதினத்திற்கு அல்ல
தருமபுரத்தில் முந்தைய ஆதினம் இருக்கும் போதே இதே பல்லக்கு விவகாரத்துக்காக 1963ல் தந்தை பெரியார் அவர்களால் எதிர்க்கப்பட்டு, அப்போதே இந்த பல்லக்கில் உட்கார்ந்து மனிதனை மனிதன் தூக்கும் பழக்கம் நிறுத்தப்பட்டது.
அதன் பின் நடைபெற்றதாக தெரியவில்லை. நடந்திருந்தால் கண்டிப்பாக திக போராட்டம் நடத்தியிருக்கும். புதிய ஆதீனம் பதவி ஏற்றபின் 2020ல் மீண்டும் இந்த பழக்கத்தை ஆரம்பிக்க முயல, உடனடியாக திக போராட்ட அறிவிப்பு வெளியிட்டதால் நிறுத்தப்பட்டது.
1963ல் நிறுத்தப்பட்ட இந்த பழக்கத்தை மீண்டும் திடீரென 2020 ஆரம்பிக்க நினைத்தவர்கள், 2021ல் அமைதியாக இருக்க, மீண்டும் இந்த வருடம் நடத்துவோம் என்ற அறிவிப்புக்கு பின் நிச்சயமாக தூண்டுதல் இருக்கவே வாய்ப்பிருக்கிறது.
அதிலும் 500 ஆண்டு பழக்கம், வழக்கம் என்று பொய் சொல்வதெல்லாம் சங்கிகளின் கூத்தை ஒத்திருக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த பின்னணியை தீவிரமாக விசாரித்து தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
- ஏ.சிவகுமார்