கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு!! சாவிலும் இணைபிரியா தம்பதி!

 

மயிலாடுதுறை அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்து சாவிலும் இணைபிரியாத தம்பதியால் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழ காலனியில் வசித்து வந்தவர் குணசீலன் (74). இவரது மனைவி தமிழரசி (68). திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகும் இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வந்த நிலையில் குணசீலன் தமிழரசி இருவரும் தங்களது பூர்வீக வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குணசீலன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். 48 ஆண்டுகள் தனது வாழ்வில் இரண்டற கலந்து தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது கணவர் இறந்ததால் தமிழரசி துடித்துப்போனார்.

தனது கணவர் தன்னை விட்டுச்சென்ற துக்கம் தாங்காமல் அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழரசியும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அவர்களின் பிள்ளைகள், உறவினர்கள் உட்பட கிராமமே சோகத்தில் மூழ்கியது. இதனையடுத்து இறந்த அந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்து இருவரின் உடல்களையும் அடக்கம் செய்தனர்.

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்து சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதியால் அனைவரும் சோகத்தில் மூழ்கினாலும் இருவரின் இணைபிரியா உறவு அனைவரையும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.