தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 ஆக உள்ளது

 

இன்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 34,53,233 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 12 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 11 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,51,266 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 26 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,14,983 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 225 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 14,044 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,47,45,785 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று உயிரிழப்பு ஏற்படவில்லை, இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,025 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.