தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 38 ஆயிரத்து 40 ஆக உயர்வு

 

இன்று ஒரே நாளில் 463 பேருக்கு கொரோனா பாதிப்பு என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 35,75,843 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 103 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 365 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,88,937 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 436 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,32,547 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,820 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 18,668 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,79,79,083 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று ஒருவர் உயிரிழந்தார், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,040 ஆக உள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.