60 அடி உயரத்தில் இருந்து ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்.. மது போதையால் விபரீதம்!!

 

குழித்துறை அருகே மது போதையில் இருந்த நபர் 60 அடி உயரத்தில் இருந்து ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 அடி உயரத்தில் இருந்து மதுபோதையில் ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாக குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடலில் சிறு காயங்களுடன் உயிருக்கு போராடியபடி சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிடந்துள்ளார். உடனே தீயணைப்பு துறையினர் அந்த நபரை மீட்டு மேலே கொண்டு வர முயற்சி செய்தனர்.

ஆனால் உயரம் அதிகமாக இருந்ததால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஸ்ட்ரெட்ச்சரில் சுமந்து வந்து மேல் பகுதிக்கு கொண்டு வந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் தவறி விழுந்த நபர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சிங் (45), என்றும் ரயில்வே பாலத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் மேல் மது போதையில் இருந்ததால் தவறி விழுந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.