திருப்பதி கங்கை அம்மன் கோவில் திருவிழா..  அம்மனுக்காக தலையில் தட்டு ஏந்தி வந்த ரோஜா!!

 

திருப்பதி கங்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இந்தத் திருவிழா அடுத்த புதன் அன்று நிறைவடைய உள்ளது.

திருவிழாவை முன்னிட்டு திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி துவங்கி பல்வேறு பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, அவருடைய கணவர் செல்வமணி ஆகியோர் இன்று கங்கையம்மன் கோவிலில் வழிபட்டனர். பின்னர் கங்கயம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து வழிபாடு நடத்தினர்.