தூக்கி வீசப்பட்ட தாய்... பள்ளியில் இருந்து அழைத்து வந்தபோது நேர்ந்த விபரீதம்!! பதைபதைக்கும் வீடியோ

 

தெலங்கானாவில் பள்ளியில் இருந்து மகளை அழைத்து வந்த பெண் மீது மினிலோடு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான பதைபதைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பாலாபூரில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சாலையில் நடந்து சென்ற பெண் மீது டிராலி ஆட்டோ அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பர்வீன் பேகம் (38) என்ற பெண் தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அவர் தனது மகள் மற்றும் மற்றொரு பெண்ணுடன் ஷாஹேன் நகர் நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் இடதுபுறத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

இந்த நிலையில், அதிவேகமாக வந்த டாடா ஏஸ் ஆட்டோ அந்த பெண் மீது மோதியது. மாணவியின் தாயாரை யாரோ அழைத்தது போல் தோன்றியது. திரும்பிப் பார்க்கும் முன், விபத்து நடந்துள்ளது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணின் உயிர் காற்றில் பறந்தது. இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. அருகில் இருந்த தாய் மற்றும் மகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கொஞ்சம் இருந்தாலும் அவர்களுக்கு விபத்து நடந்திருக்கும்.

இந்த விபத்து குறித்து பாலாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநரின் தவறுதான் என அடிப்படையில் முடிவு செய்தனர். அந்த பெண் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது.. அதிவேகமாக வந்த ஆட்டோ பெண் மீது மோதியது.. தூக்கி வீசப்பட்டு வெகுதூரம் விழுந்தது.