இளம்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்.. சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

 

மத்திய பிரதேசத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை மருத்துவர் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக கழுத்தில் சில பிரச்சனைகள் இருந்துள்ளது. இதன் காரணமாக இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்காக அப்பகுதியில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தீபக் நாயக் (30) என்ற மருத்துவரை தொடர்பு கொண்டுள்ளார். 

இதற்காக தொலைபேசியில் பேசியபோது இவ்ர்களுக்கு நட்பு உருவாகியுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த மருத்துவர் அந்த பெண்ணை காதலிப்பதாகவும் அவரை உடனடியாக திருமணம் செய்வதாகவும் கூறியுள்ளார். இதனை அந்த பெண் நம்பிய நிலையில், அவரை போபால் பகுதிக்கு வருமாறு அந்த மருத்துவர் அழைத்துள்ளார்.

அதன்படி அந்த பெண்ணும் மருத்துவர் கூறிய இடத்துக்கு வந்துள்ளார். அங்கு, அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த மருத்துவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பதும், அவர்கள் ஒரிசாவில் இருப்பதும் அந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

எனினும் அந்த மருத்துவர் அந்த இளம்பெண்ணை ஒரு அறையில் அடைத்து தொடர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிய அந்த பெண் காவல் நிலையத்தை அணுகி தனது நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மருத்துவர் தீபக் நாயக்கை கைது செய்ய வந்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.