ஆந்திராவில் பெரும் விபத்து.. நொடிகளில் இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்.. அதிர்ச்சி வீடியோ

 

ஆந்திராவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள டோர்னா என்ற இடத்தில் இன்று அதிகாலை மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. லாட்ஜ் மேலாளரின் கவனத்துடன் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஸ்ரீசைலம் செல்லும் வழியில் பருச்சூரி சுப்பாராவ் என்பவருக்கு சொந்தமான வாசவி லாட்ஜ் கட்டிடம் இடிந்து விழுந்தது.

கட்டடத்தை ஒட்டி, புதிய கட்டடம் கட்ட, உரிமையாளரின் சகோதரர் ராமராவ், 10 அடி ஆழத்திற்கு அஸ்திவாரம் தோண்டினார். பக்கத்து லாட்ஜ் கட்டிடத்தின் அஸ்திவாரம் போதிய ஆழமில்லாததால் பக்கத்து பகுதியில் தோண்டப்பட்ட அடித்தள குழிக்குள் கட்டிடம் இடிந்து விழுந்தது.