கைலி, பனியனுடன் மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. வியந்து பார்த்த மக்கள்.. வைரல் வீடியோ!

 

புதுச்சேரி முன்னாள் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகளை தலையில் தூக்கி சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநில முன்னாள் வேளாண்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கமலக்கண்ணன். இவர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் நெல் வயல்களை வைத்து விவசாயம் செய்து வருகிறார். அமைச்சராக இருக்கும்போதே தனது நெல் வயலை உழுதல், விதை தெளித்தல், களை எடுத்தல், நாற்று நடுதல், உரம் தெளித்தல், மாடுகளை குளிப்பாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகளை செய்து வந்தார்.

அவ்வப்போது இவரது விவசாய பணிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும். அதுமட்டுமின்றி, கமலக்கண்ணன் காரில் செல்லும்போது திடீரென சாலையோரங்களில் இறங்கி மழை நீரால் அடைப்பட்டு கிடக்கும் சாக்கடைகளை எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லாமல் கையாலே சுத்தம் செய்துவந்தார். முன்னாள் அமைச்சராக இருந்தாலும் சாதாரண வேலைகளை எந்தவித கூச்சமும் இல்லாமல், வேலையாட்கள் உதவியுமின்றி செய்துவருவது அவரது வழக்கம்.