மகளிர் தினத்தில் இல்லத்தரிகளுக்கு ஜாக்பாட்.. சிலிண்டர் விலை ரூ. 100 குறைப்பு.. பிரதமர் மோடி அறிவிப்பு!

 

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பெண்களுக்கு தங்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  மகளிர் தினமான இன்று நமது அரசு வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள மக்களின் குடும்ப நிதிச்சுமையை பெருமளவு குறைக்கும். குறிப்பாக, நாரிசக்தி திட்டத்தின்கீழ் நல்ல பலன்கிடைக்கும்.