5 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்து மரணம்.. உயிரைப் பறித்த மொபைல் போன்!!

 

உத்தர பிரதேசத்தில் மொபைல் போனில் கார்ட்டூன்களைப் பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் அம்ஹோரா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் கோட்வாலியில் ஹதிகேடா பகுதியைச் சேர்ந்தவர் காமினி. 5 வயதான சிறுமி, தனது தாயின் பக்கத்தில் படுத்துக்கொண்டு அவரது செல்போனில் கார்ட்டூன்கள் பார்த்துக் கொண்டுள்ளார். திடீரென மயக்கம் அடைந்த அவர் தான் வைத்திருந்த செல்போனையும் தவறவிட்டுள்ளார்.

உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ அறிக்கையின்படி, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அம்ஹோரா மற்றும் பிஜ்னூர் மாவட்டங்களில் இது முதன்முறையான மரணம் இல்லை என்றும் குழந்தைகள் மற்றும் இளவயதினர் என இதுவரை 12-க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளது என the health site.com தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்ஹோரா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில், “உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தாரா என்பது விசாரணையின் மூலம் தெரிய வேண்டிய விஷயம்” என தெரிவித்துள்ளார். ஹசன்பூரின் சமூக நல மைய பொறுப்பாளர் துருவேந்திர குமார் கூறுகையில், மாரடைப்பால் சிறுமி இறந்திருக்கலாம் என தெரிவித்தார்.

இதுகுறித்து மூத்த மருத்துவர் ராகுல் பிஷ்னோய் கூறுகையில், குளிர் காலநிலை காரணமாக மாரடைப்பு ஏற்படுவது பொதுவானதாக இருக்கலாம். ஆக்ஸிஜன் அளவு மற்றும் இரத்த அழுத்தம் பொதுவாக குறைந்து, இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.