திடீரென அதிர்ந்த அந்தமான்.. நேற்று இரவு நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2 ஆக பதிவு!

 

அந்தமான் தீவில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது.

இந்திய பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது அந்தமான் நிகோபார். யூனியன் பிரதேசமான அந்தமானில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 12) இரவு 11.32 மணியளவில் அந்தமான் கடலோரப் பகுதியில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் கடல்பரப்பின் அடியிலிருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் நடந்தது. அதன் மையப்பகுதி அட்சரேகை 10.06 மற்றும் தீர்க்கரேகை 95.00 இல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, இதுவரை உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் தொடர்பாக எந்த அறிக்கையும் இல்லை.