அதிர்ச்சி! மதிய மதிய இறந்த கிடந்த எலி மற்றும் பல்லி... பெற்றோர்க்கள் போராட்டம்!!

 

மேற்கு வங்கத்தில் ஆரம்ப பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய உணவில் பல்லி மற்றும் எலி இறந்த நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 9-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள மயூரேஷ்வரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு இருந்த சம்பவம் அறங்கேறியது. அதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சம்பவம் அறங்கேறியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில்  சஹுர்காச்சி பித்யானந்தபுர் ஆரம்ப பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளில் நேற்று வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கிடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பலரின் கவனத்தையும் பள்ளிகள் பக்கம் திருப்பியுள்ளது.

உணவில் எலி மற்றும் பல்லி கிடந்ததை அறிந்த உள்ளூர்வாசிகள் பள்ளி வளாகத்தின்முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நீதிபதி நிதின் சிங்கானியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உள்ளூர்வாசியான அஃப்சார் கூறுகையில், “இந்த பள்ளியில் மதிய உணவின் தரம் மோசமாகவே இருக்கும். இதுகுறித்து மாணவர்கள் தொடர்ந்து புகார்களை எழுப்பி வந்தனர். இப்போதுதான் கையும் களவுமாக குற்றம் பிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக ஜனவரி 6-ம் தேதி, மேற்கு வங்க அரசு ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கு மதிய உணவில் சிக்கன் மற்றும் பருவகால பழங்களை வழங்க முடிவு செய்து, அதை அறிமுகப்படுத்த ரூ.371 கோடி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.