இலவசம்.. இலவசம்.. ஆகஸ்ட் 5 முதல் 15-ம் தேதி வரை அனுமதி இலவசம்!!

 

இந்தியாவில் 75வது சுதந்திர தினத்தையொட்டி அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75-ம் ஆண்டு விழா ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது ஆண்டு சுதந்திரதினத்தை சிறப்பாக ஒரு ஆண்டு வரை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் தொடர்நச்சியாக 75-வது சுதந்திர தினமானது இந்தியாவில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 5 முதல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். மேலும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.