ஜம்முவில் பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து; 5 பேர் பலி, 15 பேர் படுகாயம்

 

ஜம்மு காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பில்லாவரில் உள்ள தனு பரோல் கிராமத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

போலீசாரின் கூற்றுப்படி, இவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கோக்கிலிருந்து டன்னு பரோலுக்குச் சென்ற வாகனம் சிலா என்ற இடத்தில் கவிழ்ந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் முதலில் நான்கு பேர் உயிரிழந்நனர் மற்றும் ஐந்தாவது நபர் காயம் காரணமாக இறந்தார். காயமடைந்த 15 பேர் பில்லவரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் பலியானவர்கள் பாண்டு, ஹன்ஸ் ராஜ், அஜீத் சிங், அம்ரூ மற்றும் காகு ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.