இந்திய ரயில்வே துறையில் 9,000 காலியிடங்கள்.. எப்போது விண்ணப்பிக்கலாம்?

 

இந்திய ரயில்வே துறையில் 9,000 டெக்னீசியன் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்களின் முதல் வேலைவாய்ப்புத் தேர்வாக அரசு பணியிடங்கள் இருக்கும். அதற்கு அடுத்தபடியாக இருப்பது ரயில்வே வேலைகள் தான். இந்திய ரயில்வே சுமார் 14 லட்சம் ஊழியர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனமாகவும், உலகின் எட்டாவது பெரிய நிறுவனமாகவும் உள்ளது.

நாடு  முழுவதும் காலியாக உள்ள 9,000 தொழில்நுட்பாளர் (RRB Technician Recruitment) பதவி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான, விண்ணப்ப  செயல்முறை மார்ச் மாதம் 9ம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி இணையவழியில் விண்ணப்பங்கள்  பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே வாரியத்தின் உதவி எஞ்சின் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பாளர் பதவி இடங்களுக்கான பணியாளர் சேர்க்கை என்பது உலகின் மிகப் பெரிய பணிச் சேர்க்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முன்னதாக, 5,696 எஞ்சின் ஓட்டுநர் (Assistant Loco Pilots - ALPs) பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டது. இதற்கான , விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  தொழில்நுட்பாளர் பதவி இடங்களுக்கான (RRB Technician Recruitment)  சேர்க்கை அறிவிப்பை இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. Technician Gr 1 Signal பணியின்  கீழ் 1,100 காலியிடங்களும், Technician Gr 3 பனியின் கீழ் 7,900 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

கணிணி அடிப்படையிலான தேர்வின் அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு காலிப்பணியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்திய ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான   தெளிவாகக் கொடுக்கப்படும்.