நான்கரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 9 வயது சிறுவன்! அந்தரங்க பகுதியில் காணப்பட்ட ரத்த கரை.!!

 

ஒன்பது வயது சிறுவன், தனது பக்கத்துக்கு வீட்டைச் சேர்ந்த நான்கரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் உலாஸ்நகரில் வசித்து வரும் பெண்மணிக்கு நான்கரை வயதில் பெண் குழந்தை உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுமியின் அந்தரங்க உறுப்பில் அதிகப்படியான வலி ஏற்பட்டு அச்சிறுமி அழுதுள்ளார். இதனால் சிறுமியை தாய் சோதனையிட்டபோது அந்த பகுதி வீக்கத்துடன் ரத்த கரையும் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி சிறுமியிடம் என்ன நடந்து என கேட்டபோது, பக்கத்துவீட்டில் வசிக்கும் 9 வயதான சிறுவன் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. நான்கரை வயது மகள் மழலை மொழியில் விவரித்த இந்த கொடூர சம்பவத்தை கேட்டு கதறி துடித்த பெண்மணி கடந்த ஏப்ரல் 3-ம் தேதி விட்டல்வாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பிரிவு 376-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருப்பினும் சிறுவன் இன்னும் கைது செய்யப்படவில்லை என தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க கொள்ளை சம்பவங்களை போல பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாகியுள்ளன. பெட்டி கேஸை போல ரேப் மற்றும் கூட்டு பலாத்கார சம்பவங்கள் பெருகிவிட்டன. சிறார்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை தடுக்க போக்சோ வழக்கும் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டும்கூட இந்த கொடுமைகள் தீராமல் இருப்பது பெற்றோர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.