251 காலியிடங்கள்... 12ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்..! மிஸ் பண்ணிடாதீங்க..!

 

மத்திய ரிசர்வ் காவல் படையில் காலியாக உள்ள 251 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப் பிரிவில் காலியாக உள்ள 251 உதவி சப் இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: உதவி சப் இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டபிள்

காலியிடங்கள்: 251

கல்வித்தகுதி: மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 31-05-2023 அன்று 40 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 92,300

விண்ணப்பிக்கும் முறை: www.crpf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.05.2023 

மேலும் விவரங்கள் அறிய www.crpf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.