ஹெல்மெட் அணியாததை தட்டிக்கேட்டதால் போலீஸை தாக்கிய இளைஞர்கள்!

கன்னியாகுமரி: தக்கலையில் வாகன தணிக்கையின் போது உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர்கள் இருவர் சிறையிலடைக்கப்பட்டனர். தக்கலை உதவி ஆய்வாளரான ஜாய்சன் நேற்றுமாலை தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் தலைக்கவசம் அணியாமல் வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களை மடக்கி, ஆவணங்களை சரிப்பார்த்த போது, ஜாய்சனை இளைஞர்கள் இருவரும் தாக்கிவிட்டு, தப்பியோட முயன்றனர். இளைஞர்களை அந்த பகுதி மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவர் மீது கொலை முயற்சி
 

ஹெல்மெட் அணியாததை தட்டிக்கேட்டதால் போலீஸை தாக்கிய இளைஞர்கள்!கன்னியாகுமரி: தக்கலையில் வாகன தணிக்கையின் போது உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர்கள் இருவர் சிறையிலடைக்கப்பட்டனர்.

தக்கலை உதவி ஆய்வாளரான ஜாய்சன் நேற்றுமாலை தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் தலைக்கவசம் அணியாமல் வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களை மடக்கி, ஆவணங்களை சரிப்பார்த்த போது, ஜாய்சனை இளைஞர்கள் இருவரும் தாக்கிவிட்டு, தப்பியோட முயன்றனர்.

இளைஞர்களை அந்த பகுதி மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.

 

From around the web