நான் தான்பா பைக் திருடன்… ரஜினியை சீண்டிய வாலிபர் திருட்டு வழக்கில் கைது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ரஜினிகாந்திடம் “யார் நீங்க” என்று கேட்டு சீண்டிய வாலிபர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் “யார் நீங்க” என்று ரஜினியிடம் கேட்டதும் ”நான் தான் ரஜினிகாந்த்” என்ற பதிலளித்தார். அந்த வீடியோ சமூகத்தளத்தில் வைரலானது. இளைஞர் சந்தோஷை, மிகப்பெரிய தமிழனப் போராளி என்பதைப் போல் கொண்டாடினார்கள். அந்த நேரத்திலேயே இந்த சந்தோஷைப் பற்றி,
 

நான் தான்பா பைக் திருடன்… ரஜினியை சீண்டிய வாலிபர் திருட்டு வழக்கில் கைது!தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ரஜினிகாந்திடம் “யார் நீங்க” என்று கேட்டு சீண்டிய வாலிபர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு  சென்ற போது அங்கு சிகிச்சை பெற்று வந்த  சந்தோஷ் “யார் நீங்க” என்று ரஜினியிடம் கேட்டதும்  ”நான் தான் ரஜினிகாந்த்” என்ற  பதிலளித்தார். அந்த வீடியோ சமூகத்தளத்தில் வைரலானது. இளைஞர் சந்தோஷை, மிகப்பெரிய தமிழனப் போராளி என்பதைப் போல் கொண்டாடினார்கள்.

அந்த நேரத்திலேயே இந்த சந்தோஷைப் பற்றி, பணத்திற்காக பேரம் பேசியதாக தகவல்கள் வந்தது. இப்போது பைக் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி முத்துகிருஷ்ணா புரத்தில் வசித்து வரும் சாம்குமார் என்ற 24 வயது இளைஞர் தன்னுடைய பைக் திருட்டு போய்விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

நான் தான்பா பைக் திருடன்… ரஜினியை சீண்டிய வாலிபர் திருட்டு வழக்கில் கைது!

தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். பண்டாரம்பட்டியைச் சார்ந்த சந்தோஷ், கால்டுவெல் காலனி மணி, ஆசிரியர் காலனி சரவணன் ஆகிய மூவரும் கூட்டாகச் சேர்ந்து பைக்கை திருடியுள்ளது தெரிய வந்துள்ளது. மூன்று பேரையும் கைது செய்து பைக்கை மீட்டுள்ளனர் போலீசார்.

சந்தோஷ் கைது குறித்து அறிந்த தூத்துக்குடி ரஜினி ரசிகர்கள் அந்த செய்தியை  “நான் தான்பா பைக் திருடன்” என்று குறிப்பிட்டு  சமூகத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். ஸ்டெர்லைட் போராளியாக சித்தரிக்கப்பட்ட சந்தோஷ் பைக் திருடனாக பிரபலமடைந்துள்ளார்.

http://www.A1TamilNews.com 

From around the web