கொரோனா 3-ம் அலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 
Tedros-Adhanom

கொரோனா 3-ம் அலையின் ஆரம்ப கட்டத்தில் நாம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரிசியஸ் தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. கொரோனவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், கொரோனா 3-ம் அலையின் ஆரம்ப கட்டத்தில் நாம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரிசியஸ் தெரிவித்திருக்கிறார்.

டெல்டா மரபணு வைரஸ் வேகமாக பரவும் நிலையில், பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து பொது சுகாதார நடவடிக்கைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

டெல்டா மரபணு மாற்ற வைரஸ் 111 நாடுகளில் பரவி உள்ளதாக குறிப்பிட்ட அவர், விரைவில் உலக நாடுகள் முழுவதிலும் அது பரவி கொரோனா அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் 10 வாரங்கள் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், கடந்த 4 வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

From around the web